கோவையில் பல வருடங்களாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.


கோவை: பல வருடங்களாக சிறையில் உள்ள சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பின்னரும் கைதிகள் பலர் பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் உள்ளனர். காந்தி ஜெயந்தி, அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில் கைதிகளின் நன்னடத்தை கொண்டு விடுவிக்கப்படுவது வழக்கமாக நடைபெறுகின்றது.

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.



இந்த அரசாணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகவும் மதசார்பற்ற நீதிமுறைகளுக்கு மாற்றாகவும் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு அப்பட்டமாக வெளிப்படுவது விதமாகவும் சிறுபான்மை மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஜமா இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மேற்கண்ட அரசாணையில் திருத்தம் செய்து ஜாதி, மத வழக்கு பேதமில்லாது சிறை கைதிகளை முன்விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...