பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.
கோவை: பல வருடங்களாக சிறையில் உள்ள சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பின்னரும் கைதிகள் பலர் பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் உள்ளனர். காந்தி ஜெயந்தி, அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில் கைதிகளின் நன்னடத்தை கொண்டு விடுவிக்கப்படுவது வழக்கமாக நடைபெறுகின்றது.
கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகவும் மதசார்பற்ற நீதிமுறைகளுக்கு மாற்றாகவும் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு அப்பட்டமாக வெளிப்படுவது விதமாகவும் சிறுபான்மை மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஜமா இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மேற்கண்ட அரசாணையில் திருத்தம் செய்து ஜாதி, மத வழக்கு பேதமில்லாது சிறை கைதிகளை முன்விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பின்னரும் கைதிகள் பலர் பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் உள்ளனர். காந்தி ஜெயந்தி, அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில் கைதிகளின் நன்னடத்தை கொண்டு விடுவிக்கப்படுவது வழக்கமாக நடைபெறுகின்றது.
கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகவும் மதசார்பற்ற நீதிமுறைகளுக்கு மாற்றாகவும் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு அப்பட்டமாக வெளிப்படுவது விதமாகவும் சிறுபான்மை மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஜமா இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மேற்கண்ட அரசாணையில் திருத்தம் செய்து ஜாதி, மத வழக்கு பேதமில்லாது சிறை கைதிகளை முன்விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.