வால்பாறை அருகே நியாய விலை கடை மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைக்கூட்டம்..!

8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நியாயவிலை கடை, பள்ளி சத்துணவு மையங்களை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே நியாய விலை கடை மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை 8 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், நியாயவிலை கடைகள், பள்ளி சத்துணவு மையங்கள் போன்றவைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இதையடுத்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல், வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை அருகே நேற்று இரவு உருளிகள் எஸ்டேட் பகுதியில் 8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரோஜா நியாயவிலை கடையை உடைத்து, உள்ளேயிருந்த அரிசி, பருப்பு, கோதுமை போன்றவைகளை தின்று கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தியது.



மேலும், அதே யானைகள் கூட்டம் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஜன்னல், கதவு, சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியிலிருந்து காட்டு யானைகளை விரட்டினர்.

இதனிடையே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...