வால்பாறை அருகே நியாய விலை கடை மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைக்கூட்டம்..!

8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நியாயவிலை கடை, பள்ளி சத்துணவு மையங்களை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே நியாய விலை கடை மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை 8 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், நியாயவிலை கடைகள், பள்ளி சத்துணவு மையங்கள் போன்றவைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இதையடுத்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல், வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை அருகே நேற்று இரவு உருளிகள் எஸ்டேட் பகுதியில் 8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரோஜா நியாயவிலை கடையை உடைத்து, உள்ளேயிருந்த அரிசி, பருப்பு, கோதுமை போன்றவைகளை தின்று கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தியது.



மேலும், அதே யானைகள் கூட்டம் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஜன்னல், கதவு, சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியிலிருந்து காட்டு யானைகளை விரட்டினர்.

இதனிடையே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...