புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு திருப்பூரில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் துணைத் தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
திருப்பூரில் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர் வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி பணப்பலன்களை வழங்க வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படியை நிலுவை ஊதியத்துடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.