காந்திபுரம் பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி

காந்திபுரம் 51வது வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌவுன ஊர்வலம் காந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் அம்மன் கே.அர்ஜுனன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச அன்னதானம்  வழங்கப்பட்டது. 



51வது வட்ட கழக செயலாளர் மற்றும் கல்வி, விளையாட்டு, பூங்கா குழு உறுப்பினர் எஸ்.ஜே அசோக் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காந்திபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் வக்கீல் ராஜன், அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...