கோவை மதுக்கரை அருகே அவுட்டுகாய் வெடித்து நாய் பரிதாபமாக பலி..!

மதுக்கரை பகுதியில் அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே அவுட்டு்காய் வெடித்து சம்பவ இடத்திலேயே நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலு கார்டன் பகுதியில் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை வீசி சென்றுள்ளார். நேற்று அந்த வழியாக சென்ற நாய் அவுட்டுக்காயை கடித்தது.

இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் நாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

கடந்த வாரம் இதே போல் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை இந்த பகுதியில் வீசி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் அதன் மீது ஏறியது. உடனே அவுட்டுக்காய் வெடித்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...