பேரூர் பச்சாபாளையம் அருகே ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை பேரூர் அருகே கேரளாவிற்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, சரக்கு வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பேரூர் பச்சாபாளையம், காந்தி நகர் அருகே தனியார் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் பேரூர் மற்றும் மாதம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் மூலமாக இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.
இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு நேற்று சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சரக்கு வாகனத்தின் உரிமையாளர் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்துவை (42), கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிரைவர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
பேரூர் பச்சாபாளையம், காந்தி நகர் அருகே தனியார் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் பேரூர் மற்றும் மாதம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் மூலமாக இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.
இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு நேற்று சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சரக்கு வாகனத்தின் உரிமையாளர் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்துவை (42), கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிரைவர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.