கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - வாகன உரிமையாளர் கைது..!

பேரூர் பச்சாபாளையம் அருகே ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை பேரூர் அருகே கேரளாவிற்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, சரக்கு வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பேரூர் பச்சாபாளையம், காந்தி நகர் அருகே தனியார் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் பேரூர் மற்றும் மாதம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் மூலமாக இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.

இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு நேற்று சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, சரக்கு வாகனத்தின் உரிமையாளர் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்துவை (42), கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிரைவர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...