தாராபுரத்தில் பெய்த கனமழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோள சாகுபடி முற்றிலும் பாதிப்பு - விவசாயிகள் கவலை..!

வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெய்த கனமழைக்கு 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் தாராபுரம் 153 மில்லி மீட்டர் மழையும், குண்டடம் பகுதியில் 200 மில்லி மீட்டர் அதிகப்படியான மழையும் பதிவானது.

இதனிடையே, குண்டடம் பகுதியில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் மக்காச்சோள பயிர் பயிரிட்டு இருந்தனர். குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் பயிர் என்பதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி செய்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பால் படிக்கும் தருவாயில் இருந்த மக்காச்சோளம் அனைத்தும் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவு செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்த நிலையில், மழையால் முற்றிலும் சேதமடைந்தது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.



மேலும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக வேளாண்துறை அதிகாரி பழனி குமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குண்டடம், சூரியநல்லூர், தெக்கலூர், வெங்கி பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தற்போது ஆய்வு செய்த வரை சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மற்றும் பாதிப்படைந்ததாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...