அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலம் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர்.
கோவை: கோவையில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டதாக, விளாங்குறிச்சியில் 1.90 ஏக்கர் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சியில் 3.50 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு, நகர் ஊரமைப்பு இயக்குனர் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப்பிரிவில், பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், 1.90 ஏக்கர் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவை ரத்து செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர் தியாகராஜன், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு மனு அளித்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.90 ஏக்கர் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த வீட்டுமனை ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சியில் 3.50 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு, நகர் ஊரமைப்பு இயக்குனர் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப்பிரிவில், பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், 1.90 ஏக்கர் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவை ரத்து செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர் தியாகராஜன், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு மனு அளித்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.90 ஏக்கர் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த வீட்டுமனை ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது.