பொள்ளாச்சி அருகே ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் மேல்நிலை தொட்டி மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு!

குடிபோதையில் கார் மீது மோதியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறி குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி ஜோதி நகர் சி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சித்திக் நேற்று குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்த சித்திக் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 70 அடி உயரமுள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கீழே இறங்கி வருமாறு அவரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து சித்திக் கீழே இறங்கி வந்தார்.



குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆட்டோ ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...