பொள்ளாச்சி அருகே ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் மேல்நிலை தொட்டி மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு!

குடிபோதையில் கார் மீது மோதியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறி குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி ஜோதி நகர் சி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சித்திக் நேற்று குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்த சித்திக் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 70 அடி உயரமுள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கீழே இறங்கி வருமாறு அவரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து சித்திக் கீழே இறங்கி வந்தார்.



குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆட்டோ ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...