குடிபோதையில் கார் மீது மோதியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறி குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி ஜோதி நகர் சி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சித்திக் நேற்று குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்த சித்திக் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 70 அடி உயரமுள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கீழே இறங்கி வருமாறு அவரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து சித்திக் கீழே இறங்கி வந்தார்.

குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆட்டோ ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி ஜோதி நகர் சி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சித்திக் நேற்று குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்த சித்திக் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 70 அடி உயரமுள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கீழே இறங்கி வருமாறு அவரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து சித்திக் கீழே இறங்கி வந்தார்.
குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆட்டோ ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.