பாலியல் ரீதியாக மாணவிகளுடன் பேசிய விவகாரம் தொடர்பாக, கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்பட்டு, ரேஸ்கோர்ஸ் போலீஸ் Sec 354, 365, 506 (2) 4 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் பாலியல் புகார் அளித்து போராட்டம் நடத்திய நிலையில் பேராசிரியர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பந்தயசாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேராசிரியர் ஒருவர், நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கல்லூரி வாயிலில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக கல்லூரி வாசலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனையடுத்து, பாலியல் ரீதியாக மாணவிகளுடன் பேசிய விவகாரம் தொடர்பாக, கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்பட்டு, ரேஸ்கோர்ஸ் போலீஸ் Sec 354, 365, 506 (2) 4 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மானபங்கப்படுத்துதல் (354), கடத்தல் (365), கொலை மிரட்டல் (506(2)) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.