நடராஜர் மணியார் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி: நடராஜர் மணியார்காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணைச் சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குப் பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் ஒரு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகள் குரலுக்கு மதிப்பு அளித்து வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப்பெற்றது ஜனநாயக மாண்பு இதை அதிமுக வரவேற்கிறது.
விவசாயிகளுடைய எண்ணம் என்னவோ அதற்கு ஏற்றாற்போல் தான் கடந்த நான்கரை ஆண்டுக் காலம் எடப்பாடியார் ஆட்சி செய்தார். இந்த சட்டத்தைப் பொறுத்தவரைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குப் பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் ஒரு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகள் குரலுக்கு மதிப்பு அளித்து வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப்பெற்றது ஜனநாயக மாண்பு இதை அதிமுக வரவேற்கிறது.
விவசாயிகளுடைய எண்ணம் என்னவோ அதற்கு ஏற்றாற்போல் தான் கடந்த நான்கரை ஆண்டுக் காலம் எடப்பாடியார் ஆட்சி செய்தார். இந்த சட்டத்தைப் பொறுத்தவரைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.