மழைக்கால விபத்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-பள்ளிகளுக்கு சுற்றறிக்கை.!!

மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை:-

தொடர் மழையால் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அருகில் செல்லாமல் தடுக்க வேண்டும். வகுப்பறைகள் பாதித்திருந்தால், அதைப் பயன்படுத்தக் கூடாது. மின் கசிவு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மின் இணைப்பைத் துண்டித்து வைக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் நீர், திறந்தவெளி கிணறு, கழிவு நீர்த் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை மாற்றி, பாதுகாப்பான பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் மரங்கள் விழும் நிலையிலிருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தேவைப்படும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரை அணுகி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் முன் பள்ளி கட்டிட உறுதித் தன்மை மற்றும் வளாகத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...