மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: மழைக்கால விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட்டு, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை:-
தொடர் மழையால் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அருகில் செல்லாமல் தடுக்க வேண்டும். வகுப்பறைகள் பாதித்திருந்தால், அதைப் பயன்படுத்தக் கூடாது. மின் கசிவு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மின் இணைப்பைத் துண்டித்து வைக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர், திறந்தவெளி கிணறு, கழிவு நீர்த் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை மாற்றி, பாதுகாப்பான பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மரங்கள் விழும் நிலையிலிருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
தேவைப்படும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரை அணுகி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் முன் பள்ளி கட்டிட உறுதித் தன்மை மற்றும் வளாகத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை:-
தொடர் மழையால் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அருகில் செல்லாமல் தடுக்க வேண்டும். வகுப்பறைகள் பாதித்திருந்தால், அதைப் பயன்படுத்தக் கூடாது. மின் கசிவு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மின் இணைப்பைத் துண்டித்து வைக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர், திறந்தவெளி கிணறு, கழிவு நீர்த் தேக்கத் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை மாற்றி, பாதுகாப்பான பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மரங்கள் விழும் நிலையிலிருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
தேவைப்படும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரை அணுகி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் முன் பள்ளி கட்டிட உறுதித் தன்மை மற்றும் வளாகத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.