கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோவை: கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர்ப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனிடையே உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு நோய்த் தொற்றுகள் பரவாமல் இருக்கக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின் டயர், இருக்கைகள் மற்றும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைப்பிடிகளிலும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்பட்டது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நோய்த் தொற்றுகளின் தாக்கம் குறைந்து இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர்ப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனிடையே உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு நோய்த் தொற்றுகள் பரவாமல் இருக்கக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின் டயர், இருக்கைகள் மற்றும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைப்பிடிகளிலும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்பட்டது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நோய்த் தொற்றுகளின் தாக்கம் குறைந்து இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.