பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி கரிகால அம்மன் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(71). இவர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தம்பதிகள் இருவர் முகவரி கேட்பது போல், மூதாட்டியிடம் இருந்து தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து கிழக்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் நகை பறிப்பில் ஈடுபட்ட தம்பதிகள் இருவர் பிடிபட்டனர்.

விசாரணையில், இருவரும் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த அஜய் மற்றும் அவரது மனைவி சுருதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அஜய் அதிமுக நகர 5 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் என்பதும், அவரது தந்தை தண்டபாணி அதிமுக நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்பதும் தெரியவந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டபாணி மற்றும் பொள்ளாச்சி நகர 5வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அஜய் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இருவரும் நீக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி கரிகால அம்மன் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(71). இவர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தம்பதிகள் இருவர் முகவரி கேட்பது போல், மூதாட்டியிடம் இருந்து தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து கிழக்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் நகை பறிப்பில் ஈடுபட்ட தம்பதிகள் இருவர் பிடிபட்டனர்.
விசாரணையில், இருவரும் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த அஜய் மற்றும் அவரது மனைவி சுருதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அஜய் அதிமுக நகர 5 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் என்பதும், அவரது தந்தை தண்டபாணி அதிமுக நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்பதும் தெரியவந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டபாணி மற்றும் பொள்ளாச்சி நகர 5வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அஜய் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இருவரும் நீக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.