கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவையில் துவங்கியிருக்கிறது. இங்கு ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை: விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது
விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்படப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கூடிய சீக்கிரமே விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விக்ரம் படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்படப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கூடிய சீக்கிரமே விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விக்ரம் படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.