விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடக்கம்.!!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவையில் துவங்கியிருக்கிறது. இங்கு ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


கோவை: விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்படப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.



கடந்த ஜூலை மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கூடிய சீக்கிரமே விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விக்ரம் படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...