நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும் வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும் வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.