ஆனைமலை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி கொலை மிரட்டல் வழக்கில் கைது..!

அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: ஆனைமலை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (41). இவர் கடந்த 2002ம் ஆண்டு ஆனைமலையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் அவ்வப்போது பரோலில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17ம் தேதி 3 நாள் பரோலில் சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, நேற்று இவரது உறவினரிடம் சண்டை போட்டதாக கூறி அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40) என்பவரை தொலைபேசியில் அழைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், கருப்புசாமி ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று சுப்பேகவுண்டன்புதூர் வீட்டிலிருந்த பழனிச்சாமி கைது செய்து, அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...