அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: ஆனைமலை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (41). இவர் கடந்த 2002ம் ஆண்டு ஆனைமலையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் அவ்வப்போது பரோலில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17ம் தேதி 3 நாள் பரோலில் சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, நேற்று இவரது உறவினரிடம் சண்டை போட்டதாக கூறி அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40) என்பவரை தொலைபேசியில் அழைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், கருப்புசாமி ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று சுப்பேகவுண்டன்புதூர் வீட்டிலிருந்த பழனிச்சாமி கைது செய்து, அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (41). இவர் கடந்த 2002ம் ஆண்டு ஆனைமலையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் அவ்வப்போது பரோலில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17ம் தேதி 3 நாள் பரோலில் சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, நேற்று இவரது உறவினரிடம் சண்டை போட்டதாக கூறி அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40) என்பவரை தொலைபேசியில் அழைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், கருப்புசாமி ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று சுப்பேகவுண்டன்புதூர் வீட்டிலிருந்த பழனிச்சாமி கைது செய்து, அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.