கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவை கலைக் கல்லூரி பேராசிரியர் என்பவர் மீது கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை இன்று அளித்தனர்.
பாதிக்கப்பட்ட அரசு கல்லூரி மாணவிகள் கடந்த சனிக்கிழமை புகார் அளித்தும் அரசு கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கியுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.