திருப்பூரில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.!!

வரி ஏய்ப்பு நடித்துள்ளதாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: வரி ஏய்ப்பு நடித்துள்ளதாகத் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் திருப்பூர் லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்துள்ளது.



இதனடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் உள்ள கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் என மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உணவகங்கள் வெளிப்புறமாக மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...