திருப்பூரில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.!!

வரி ஏய்ப்பு நடித்துள்ளதாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: வரி ஏய்ப்பு நடித்துள்ளதாகத் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் திருப்பூர் லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்துள்ளது.



இதனடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் உள்ள கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் என மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உணவகங்கள் வெளிப்புறமாக மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...