வரி ஏய்ப்பு நடித்துள்ளதாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்: வரி ஏய்ப்பு நடித்துள்ளதாகத் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் திருப்பூர் லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் உள்ள கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் என மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது உணவகங்கள் வெளிப்புறமாக மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் திருப்பூர் லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் புகார் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், லட்சுமி நகர் பகுதி மற்றும் அவிநாசியில் உள்ள கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் என மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது உணவகங்கள் வெளிப்புறமாக மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5-முதல் 6-பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.