நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: முட்டைக்கோஸ், பீட்ரூட் நீரில் மூழ்கின

கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும், அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. முட்டைக்கோஸ், பீட்ரூட் நீரில் மூழ்கின.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மிகத் தீவிரமாகப் பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை பெய்தது. உதகை நகரில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.



இதனால் உதகை காந்தல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் உதகை நகரில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் ஜந்து வீடுகள் அந்தரத்தில் தொங்கின.



நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் குடியிருப்புக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...