கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும், அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. முட்டைக்கோஸ், பீட்ரூட் நீரில் மூழ்கின.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மிகத் தீவிரமாகப் பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை பெய்தது. உதகை நகரில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் உதகை காந்தல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் உதகை நகரில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் ஜந்து வீடுகள் அந்தரத்தில் தொங்கின.

நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் குடியிருப்புக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மிகத் தீவிரமாகப் பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை பெய்தது. உதகை நகரில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் உதகை காந்தல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் உதகை நகரில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் ஜந்து வீடுகள் அந்தரத்தில் தொங்கின.
நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் குடியிருப்புக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.