வால்பாறை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழப்பு.!!

வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களை பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.


கோவை: வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்த வயதான முதியவர் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளார். காலை 8 மணி ஆகியும் அந்தப் பேருந்து நிலையத்தில் படுத்த நிலையிலிருந்ததை கண்டு அங்குள்ள பொதுமக்கள் வால்பாறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர் சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவில் கடந்த 30 ஆண்டு காலங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இவர் சோலையாறு எஸ்டேட் சேர்ந்த பழனியம்மாள் என்பவருடைய தகப்பனார் பெருமாள் (வயது 90).

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் மகள் மற்றும் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வால்பாறை பகுதியில் காந்தி சிலை பேருந்து நிலைய வாசியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் இறந்ததை கண்டு தினந்தோறும் அவருக்கு உணவளித்து ஆதரவு தந்த அப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வால்பாறை காவல் நிலையத்திலிருந்து சோலையார் எஸ்டேட்டில் உள்ள அவருடைய மகள் பழனியம்மாளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பெருமாளுடைய மகள் மற்றும் அக்கா உறவினர்கள் அனைவரிடமும் பிரேதத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் வால்பாறை பகுதிகளில் சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு பிரேதத்தை வால்பாறை பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சமூக சேவகரைப் பாராட்டினர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...