வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களை பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கோவை: வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்த வயதான முதியவர் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளார். காலை 8 மணி ஆகியும் அந்தப் பேருந்து நிலையத்தில் படுத்த நிலையிலிருந்ததை கண்டு அங்குள்ள பொதுமக்கள் வால்பாறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர் சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவில் கடந்த 30 ஆண்டு காலங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இவர் சோலையாறு எஸ்டேட் சேர்ந்த பழனியம்மாள் என்பவருடைய தகப்பனார் பெருமாள் (வயது 90).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் மகள் மற்றும் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வால்பாறை பகுதியில் காந்தி சிலை பேருந்து நிலைய வாசியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் இறந்ததை கண்டு தினந்தோறும் அவருக்கு உணவளித்து ஆதரவு தந்த அப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வால்பாறை காவல் நிலையத்திலிருந்து சோலையார் எஸ்டேட்டில் உள்ள அவருடைய மகள் பழனியம்மாளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பெருமாளுடைய மகள் மற்றும் அக்கா உறவினர்கள் அனைவரிடமும் பிரேதத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் வால்பாறை பகுதிகளில் சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு பிரேதத்தை வால்பாறை பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சமூக சேவகரைப் பாராட்டினர்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்த வயதான முதியவர் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளார். காலை 8 மணி ஆகியும் அந்தப் பேருந்து நிலையத்தில் படுத்த நிலையிலிருந்ததை கண்டு அங்குள்ள பொதுமக்கள் வால்பாறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர் சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவில் கடந்த 30 ஆண்டு காலங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இவர் சோலையாறு எஸ்டேட் சேர்ந்த பழனியம்மாள் என்பவருடைய தகப்பனார் பெருமாள் (வயது 90).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் மகள் மற்றும் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வால்பாறை பகுதியில் காந்தி சிலை பேருந்து நிலைய வாசியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் இறந்ததை கண்டு தினந்தோறும் அவருக்கு உணவளித்து ஆதரவு தந்த அப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வால்பாறை காவல் நிலையத்திலிருந்து சோலையார் எஸ்டேட்டில் உள்ள அவருடைய மகள் பழனியம்மாளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பெருமாளுடைய மகள் மற்றும் அக்கா உறவினர்கள் அனைவரிடமும் பிரேதத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் வால்பாறை பகுதிகளில் சமூக சேவை செய்துவரும் ஜெயன் தலைமையில், அவருடைய சொந்த செலவிலேயே நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்று அவருடைய குழு பிரேதத்தை வால்பாறை பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சமூக சேவகரைப் பாராட்டினர்.