திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.!!

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14-கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.


திருப்பூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14 கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, சதீஷ் குமாரையும் ஏலச்சீட்டில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். ஒரே ஏரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நம்பி சதீஷ்குமார் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் அவரிடம் சீட்டுக்குப் பணம் கட்டியுள்ளனர்.

இதையடுத்து, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்கும் பொழுது காலதாமதம் செய்துள்ளார். மேலும் கேட்டதற்கு அவர் வெளியே ஒரு ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர் திருப்பி தர மறுத்ததாகவும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொறுமை இழந்து இவர்கள் போய் கேட்டதற்கு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி ஏமாற்றியதை தெரிவித்தனர்.



ஆனாலும் பல்லடம் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விரைவில் ராதாமணி ஏமாற்றிய ரூ.1,14,20,000 மீட்டுத்தருமாறு தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...