ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14-கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.14 கோடி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, சதீஷ் குமாரையும் ஏலச்சீட்டில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். ஒரே ஏரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நம்பி சதீஷ்குமார் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் அவரிடம் சீட்டுக்குப் பணம் கட்டியுள்ளனர்.
இதையடுத்து, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்கும் பொழுது காலதாமதம் செய்துள்ளார். மேலும் கேட்டதற்கு அவர் வெளியே ஒரு ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர் திருப்பி தர மறுத்ததாகவும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொறுமை இழந்து இவர்கள் போய் கேட்டதற்கு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி ஏமாற்றியதை தெரிவித்தனர்.

ஆனாலும் பல்லடம் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விரைவில் ராதாமணி ஏமாற்றிய ரூ.1,14,20,000 மீட்டுத்தருமாறு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, சதீஷ் குமாரையும் ஏலச்சீட்டில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். ஒரே ஏரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நம்பி சதீஷ்குமார் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் அவரிடம் சீட்டுக்குப் பணம் கட்டியுள்ளனர்.
இதையடுத்து, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்கும் பொழுது காலதாமதம் செய்துள்ளார். மேலும் கேட்டதற்கு அவர் வெளியே ஒரு ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர் திருப்பி தர மறுத்ததாகவும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொறுமை இழந்து இவர்கள் போய் கேட்டதற்கு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி ஏமாற்றியதை தெரிவித்தனர்.
ஆனாலும் பல்லடம் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விரைவில் ராதாமணி ஏமாற்றிய ரூ.1,14,20,000 மீட்டுத்தருமாறு தெரிவித்தனர்.