வெள்ளகோவிலில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: வெள்ளகோவிலில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்20 எல் கே சி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் குடியிருந்து வரக் கூடிய சூழ்நிலையில் தனியர் கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர் அமையும் பட்சத்தில் ஏற்கனவே வயது முதியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வசித்து வரக்கூடிய சூழ்நிலையில் அவர்களுக்குத் தோல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கனவே இது குறித்து வெள்ளகோயில் நகராட்சியில் மனு அளித்துள்ள நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மீண்டும் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்களின் நலன் கருதி அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்20 எல் கே சி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் குடியிருந்து வரக் கூடிய சூழ்நிலையில் தனியர் கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர் அமையும் பட்சத்தில் ஏற்கனவே வயது முதியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வசித்து வரக்கூடிய சூழ்நிலையில் அவர்களுக்குத் தோல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கனவே இது குறித்து வெள்ளகோயில் நகராட்சியில் மனு அளித்துள்ள நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மீண்டும் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்களின் நலன் கருதி அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.