திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி - பொதுமக்கள் அதிர்ச்சி..!

இதன் காரணமாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய்த்தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கோர தாண்டவமாடிய கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 என்று அழைக்கக் கூடிய பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தாருக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் கூறுகையில், "கடந்த 13ம் தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு எச்1.என்1 உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக இருப்பதுடன் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்" என்றார்.

கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில், மற்றுமொரு சோதனையாக பன்றிக்காய்ச்சல் பரவுவது திருப்பூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...