மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் அழுகியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி மற்றும் பந்தல் வகை காய்கறிகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர வாழை மற்றும் நெல்லும் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டம் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது.
அதே போல் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்த போது பலத்த காத்து வீசியது. அதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாய்ந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி மற்றும் பந்தல் வகை காய்கறிகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர வாழை மற்றும் நெல்லும் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டம் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது.
அதே போல் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்த போது பலத்த காத்து வீசியது. அதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாய்ந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.