கோவையில் மழையால் பாதித்த தக்காளி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் அழுகியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி மற்றும் பந்தல் வகை காய்கறிகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர வாழை மற்றும் நெல்லும் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டம் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது.

அதே போல் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்த போது பலத்த காத்து வீசியது. அதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாய்ந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு மழை கால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...