அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக-வால் மட்டுமே நிரப்ப முடியும் என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அ.தி.மு.கவில் ஜெயலலிதாவை போல தகுதி வாய்ந்த தலைவர்கள் யாருமே இல்லை எனவும் அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்

தில்லியில் கொலை செய்யப்பட்ட மருத்துவர் சரவணன் வீட்டிற்கு செல்வதற்காக கோவை வந்த தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் நாராயணபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதும், தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகள் நடப்பதும் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல்  அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தீக்காய சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 

மேலும், சுனாமியால் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி நினைவு தினமான இன்று தமிழக முதல்வரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுவதாக சொல்லப்படும் வாதம் தவறானது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகம் லஞ்ச ஊழலால் புறையோடிக்கிடக்கின்றது. அதை சரி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஏற்பட்டு இருக்கும் அரசியல் வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதாவிற்கு இணையான தகுதி வாய்ந்த தலைவர்கள் அ.தி.மு.க வில் யாரும் இல்லை. அதனால், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி மற்றவர்களை மிரட்டி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியல் பா.ஜ.க-விற்கு இல்லை''. இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...