கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார்.!

கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார் கொடுத்தநிலையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணனைதேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிய மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் போலீசில் புகார் கொடுத்தநிலையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணனைதேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள சம்பத் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி சிவகாமி வயது 52, இவர் கோவை ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது மகன் கோபிநாத் 30, தொழில் தேவைக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பிரகாஷ் 31, சரவணன் 24 ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இதில் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தைத் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் பிரகாஷ் சரவணன் ஆகியோர் எனது மகனிடம் ரூபாய் 2 லட்சத்திற்கு ஆன வட்டியை மட்டுமே செலுத்தி உள்ளீர்கள்.

கடனாகப் பெற்ற ரூபாய் 2 லட்சத்தைத் திருப்பி தரும்புறி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் மகன் இருந்தார் அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பிரகாஷ் சரவணன் ஆகியோர் எனது மகனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர்.

எனவே வட்டி கேட்டு கொடுமைப்படுத்தி எனது மகனை கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுத்து மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கிய கோபிநாத்தைக் கடத்திச் சென்ற பிரகாஷ் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...