கோவையில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் துவக்கம்!

ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.



கோவை: ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.



புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ள 50000-சதுரடி கொண்ட இந்த ஹோட்டல் கட்டிடத்தில் 3 சிறப்பு வசதிகள் உள்ளன. அதில் "அன்னபூர்ணாவின் ஐகான்"-ல் 52 சொகுசு அறைகளும், 120 இருக்கைகள் வசதியுடன் கோவ் சிறப்பு உணவகமும், வழக்கமான உணவு பட்டியலின் படி இயங்கும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகமும் உள்ளது.

கோவ் என்பது ஒரு பலவகை சைவ உணவகம், முன்பதிவு செய்யும் விருந்தினர்களுக்காக சமைத்து வழங்கப்படும் பகுதியாக இருக்கும். அன்னபூர்ணாவில் ஐகான், இரண்டு வகை அறைகளைக் கொண்டது. எக்ஸிக்யுட்டிவ் மற்றும் சூட். இதில், 3 அரங்குகள், வணிகச் சந்திப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த வசதியாகவும், பார் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தின் பொறியியல் மற்றும் ஜவுளி துறைக்கு அர்ப்பணிக்கும் வகையில், இதன் உள்ளரங்க அலங்காரம், தாமிர தகடுகள் மற்றும் சிறப்பு துணிகளை கொண்டு வித்தியசாமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் புகழ் பெற்ற தொழிலதிபர் ஏ.வி வரதராஜன் துவக்கி வைத்தார்.



ஜிஆர்ஜி டிரஸ்ட் நிறுவனர் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.



சங்கரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.வி.ரமணி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் விஜய்மோகன் கோவ் - சிறப்பு உணவகத்தை துவக்கி வைத்தார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் ஐகானை துவக்கி வைத்தார்.



சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம், நர்மதா ஏசி அறையை துவக்கி வைத்தார். சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இனிப்புகள் பிரிவின் முதலாவது விற்பனையை துவக்கி வைத்தார்.

அன்னபூர்ணா தலைவர் கே.ராமசாமி, துணைத் தலைவர் டி.சுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் டி.ஸ்ரீனிவாசன், இணை இயக்குனர் ஆர்.வெங்கடேஷ், செயல் இயக்குனர்கள் ஜெகன் எஸ் தாமோதரசாமி, ஆர். கார்த்திகேயன், விவேக் ஸ்ரீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா பணியாளர்கள் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...