ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை: ஆர்.எஸ்.புரத்தில் புதிய பொலிவுடன் ஸ்ரீ அன்னபூர்ணா உடன் புதிதாக ஐகான் ஹோட்டல் மற்றும் கோவ் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ள 50000-சதுரடி கொண்ட இந்த ஹோட்டல் கட்டிடத்தில் 3 சிறப்பு வசதிகள் உள்ளன. அதில் "அன்னபூர்ணாவின் ஐகான்"-ல் 52 சொகுசு அறைகளும், 120 இருக்கைகள் வசதியுடன் கோவ் சிறப்பு உணவகமும், வழக்கமான உணவு பட்டியலின் படி இயங்கும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகமும் உள்ளது.
கோவ் என்பது ஒரு பலவகை சைவ உணவகம், முன்பதிவு செய்யும் விருந்தினர்களுக்காக சமைத்து வழங்கப்படும் பகுதியாக இருக்கும். அன்னபூர்ணாவில் ஐகான், இரண்டு வகை அறைகளைக் கொண்டது. எக்ஸிக்யுட்டிவ் மற்றும் சூட். இதில், 3 அரங்குகள், வணிகச் சந்திப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த வசதியாகவும், பார் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் பொறியியல் மற்றும் ஜவுளி துறைக்கு அர்ப்பணிக்கும் வகையில், இதன் உள்ளரங்க அலங்காரம், தாமிர தகடுகள் மற்றும் சிறப்பு துணிகளை கொண்டு வித்தியசாமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் புகழ் பெற்ற தொழிலதிபர் ஏ.வி வரதராஜன் துவக்கி வைத்தார்.

ஜிஆர்ஜி டிரஸ்ட் நிறுவனர் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

சங்கரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.வி.ரமணி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் விஜய்மோகன் கோவ் - சிறப்பு உணவகத்தை துவக்கி வைத்தார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் ஐகானை துவக்கி வைத்தார்.

சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம், நர்மதா ஏசி அறையை துவக்கி வைத்தார். சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இனிப்புகள் பிரிவின் முதலாவது விற்பனையை துவக்கி வைத்தார்.
அன்னபூர்ணா தலைவர் கே.ராமசாமி, துணைத் தலைவர் டி.சுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் டி.ஸ்ரீனிவாசன், இணை இயக்குனர் ஆர்.வெங்கடேஷ், செயல் இயக்குனர்கள் ஜெகன் எஸ் தாமோதரசாமி, ஆர். கார்த்திகேயன், விவேக் ஸ்ரீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா பணியாளர்கள் துவக்க விழாவில் பங்கேற்றனர்.