கோவை பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தில் கும்பாபிஷேக விழா!

கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.


கோவை: கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புதுப்பதி மலை கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் அழகிய இயற்கை எழில் சூழலுடன் அமைந்துள்ள ஆனந்தா கோசாலை பஞ்சமுக வேதாஷ்ரம ஆலய வளாகத்தில் புதிதாக பணியப்பெற்ற ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



முன்னதாக விழாவையொட்டி முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனுக்கு பூஜைகள் செய்து, பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து, மகாதரிசனம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன், பத்து வித அலங்கார தரிசனம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆனந்தா கோசாலை பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி செய்திருந்தார்.

விழாவில், முக்கிய விருந்தினர்கள் ஜன்தி லால், அசோக் மேத்தா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உட்பட மதுக்கரை, மாவுத்தம்பதி, நவக்கரை, புதுப்பதி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பகத்ரகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...