கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்; ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்..!

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காரணத்தினால் மாணவிக்கு பள்ளியில் வேறு யாராவது பாலியல் தொந்தரவு கொடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் முழு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவையில் கடந்த 11ம் தேதி மாலையில் உக்கடம் பகுதியில் வசித்து வந்த பிளஸ் டூ மாணவி பொன் தாரணி பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து, அனைத்து தரப்பட்ட மக்கள், மாணவ மாணவிகள், சமூக சேவை அமைப்பு, மாதர் சங்கம் என பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, 12ம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, நேற்று காலை பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உடலைப் பெற்று இறுதிச்சடங்கை நிறைவேற்றினர்.

இந்நிலையில், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது:-

தமிழக அரசும், காவல் துறையும், குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம். கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 நபர்களும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காரணத்தினால் மாணவிக்கு பள்ளியில் வேறு யாராவது பாலியல் தொந்தரவு கொடுத்தனரா? ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் முழு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...