பல்லடம் சாலை கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இரண்டு பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய 2-தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3-பேர் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சார் ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ், என்ற 3-பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச்சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியிலிருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.
இதில், விஷவாயு அதிகமாகத் தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர்.

நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்