திருப்பூரில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இரண்டு பேர் பலி!

பல்லடம் சாலை கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இரண்டு பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கிய 2-தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3-பேர் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சார் ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ், என்ற 3-பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியைச்சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியிலிருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

இதில், விஷவாயு அதிகமாகத் தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர்.



நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...