பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆழியாறு கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.


கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆழியாறு கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை,கவர்க்கல் மற்றும் சக்தி எஸ்டேட் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்த மழையால் ஆழியாறு கவி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதிக் குளிக்க வனத்துறையினர் தடை செய்துள்ளனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதேபோல் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு. கவியருவி வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் மேலும் வால்பாறை சாலை கொண்டை ஊசி மலைச்சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சாலைகளில் ஆங்காங்கே நிற்க வேண்டாம் எனவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரித்து பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் முழுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...