கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கோவை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 8ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகியோர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஜாதி சான்று, ஆதார்கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு கடன் முகாம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகியோர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஜாதி சான்று, ஆதார்கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த சிறப்பு கடன் முகாம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.