நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் 2153 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டம்..!

கோவை மாநகராட்சிக்கு 1400 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 703 வார்டுகளில் 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு 1400 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் மொத்தம் 1290 வாக்குச்சாவடிகளும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் 69 வாக்குச்சாவடிகளும், பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் 89 வாக்குச்சாவடிகளும், வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகளில் 73 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 632 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 703 வார்டுகளில் 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான ஆய்வு கூட்டம் அன்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் அடிப்படையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்விளக்கு, கழிப்பிடம், குடிநீர் வசதி, கட்டிடத்தின் தரம் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...