கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு - புதிய இணையதளம் துவக்கம்..!

www.covaidiabetes.com 2021 என்ற இணையதளம் சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர். நிர்மலா துவக்கி வைத்தார்.



கோவை: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில், புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் ஆதித்யா குகன் கூறுகையில்,

"உலக சர்க்கரை நோய் தினத்தை 1991ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச சர்க்கரை நோய் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கின.

சர்க்கரை நோயால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனத்தைக் கவரவும் இந்த நாள் உருவானது.

உலக சர்க்கரை நோய் தினம், 2006ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் 61/225 வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டது. இன்சுலினை சர் பெர்டிரிக் பாண்டிங் கண்டுபிடித்த 1922ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதியை சர்க்கரை நோய் தினமாக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துக்குப் பின், 2007ம் ஆண்டில் நீல நிற முத்திரை தயார் செய்யப்பட்டு பிரச்சாரம் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம், ஒரு குறிப்பிட்ட கருத்தின் அர்ப்பணிப்போடு, ஓரிரு ஆண்டுகளுக்கு நடத்தப்படும்.

நடப்பு 2021 - 23ம் ஆண்டுக்கான கருத்துரு, "சர்க்கரை நோய் கவனிப்பு - இப்போது இல்லாமல் வேறு எப்போது?" என்பதாகும்," என்றார்.

இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் தலைமையில் இயங்கும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் சிகிச்சை தரப்படுகிறது. இங்கு கண்டறியப்படும் இளம் வயது சர்க்கரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரின் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் இளைஞர்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பெறும் வகையில், புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். கலந்துரையாடல் தரும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக இணையதள பக்கத்தை, இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் அர்ப்பணிக்கிறோம்.

இந்த இணையதள பக்கங்கள் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில்:

இந்த இணையதள பக்கமானது, அனைத்து கேள்விகளுக்கும் ஒலி வடிவிலான பதில்களை தரும். ( சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது முதல் அதனால் ஏற்படும் சிக்கல்கள் வரை). மக்கள் மனதில் உள்ள மூட நம்பிக்கை வரை பதில்கள் உள்ளன.

உதாரணமாக, டைப் 1 சர்க்கரை நோய் பற்றி அறிய, முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒலித்தகவல்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம் பெற்றுள்ளன. அதோடு மட்டுமின்றி, தனித்துவமிக்க சமிக்ஞை பட்டன் ஒன்றும் இதில் உள்ளது.

சர்க்கரை அளவு அதிகரித்து, உதவி வேண்டுவோர் இந்த இணையத்தளத்தில் தேட நேர்ந்தால், இந்த SOS சமிக்ஞை பட்டனை அழுத்தினால், அவர்களது இருப்பிடம் அறிந்து, உதவி செய்ய முடியும். அவர்களுக்கு தேவையான கவனிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் தரப்படும்.

மேலும், இன்னும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இணையத்தள பக்கம். சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவு முறைகள், அளவீடுகள் மற்றும் இருதயம்/ சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகளின் பாதப் பாதுகாப்பு விளக்கமும் உள்ளது.

ஒவ்வொரு நாளும் இடம் பெறும் செய்திகள், கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் அறிவியல் சார்ந்த விளக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் இடம் பெற்றுள்ள கணக்கீட்டு அமைப்பு, தனிநபரின் வயது, உடலமைப்புக்கு ஏற்ற வகையில் எவ்வளவு வரை ரிஸ்க் எடுக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் நடவடிக்கைகள், பல மில்லியன் இளைஞர்களை சென்றடையும். அவர்கள், வேகமான வளர்ச்சி பெற்று வரும் மக்கள் தொகை, உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.

இந்த நாளில், "லேசான உணவுகளை உண்டு, கடினமா உழைத்து, சரியாக துாங்கி, சத்தமில்லாமல் கொல்லும் சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டுவோம்" என உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.



இணையதள முகவரி:www.covaidiabetes.com 2021 உலக சர்க்கரை நோய் தினத்தில் இந்த இணையதளம் சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...