கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்..!

கோதவாடி குளத்தில் தண்ணீர் தேங்கினால் குளத்தின் அருகில் விவசாயப் பணிகளும், குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீரும் என தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் கோதவாடிகுளம் உள்ளது. அண்மையில், பெய்த மழையால் இந்த குளத்திற்கு சிறிதளவு கூட தண்ணீர் வரவில்லை.

இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால் குளத்தின் அருகில் விவசாய பணிகளும், குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீரும்.

எனவே, புதர்மண்டி கிடந்த இந்த குளத்தை சீரமைக்க கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தனியார் நிறுவனங்கள் மற்றும் குளம் அருகில் இருக்கும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கோதவாடி ஊராட்சி நிர்வாகத்தினர் குளத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருப்பி விட வேண்டுமென தமிழக அரசிற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டுவாவி மற்றும் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வழியாகவும் பிஏபி தண்ணீர் கோதவாடி குளத்திற்கு திறந்து விடப்பட்டது.



பிஏபி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கோதவாடி குளத்தை வந்து அடைந்தது.



கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை கோதவாடி பகுதி விவசாயிகள் மலர்தூவி வரவேற்று வணங்கினர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...