கோவையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.2-ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மழையால், பூக்கள் வரத்து குறைந்து பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
கோவை: கோவையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.2-ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் ஆந்திர, கார்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்குப் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இங்கு சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2-வார காலமாகப் பெய்து வரும் மழையால், பூக்கள் வரத்து குறைந்து நேற்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
அதன்படி, மல்லிகை நேற்று ரூ.2-ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதேபோல் ஜாதி மற்றும் முல்லை ரூ.1200-வரையும் விற்கப்பட்டது. அரளி கிலோ ரூ.200-க்கும், லில்லி பூ ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.240-க்கும் விற்கப்பட்டது.
செவ்வந்தி பூ நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாகக் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் 15-பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் ஆந்திர, கார்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்குப் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இங்கு சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2-வார காலமாகப் பெய்து வரும் மழையால், பூக்கள் வரத்து குறைந்து நேற்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
அதன்படி, மல்லிகை நேற்று ரூ.2-ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதேபோல் ஜாதி மற்றும் முல்லை ரூ.1200-வரையும் விற்கப்பட்டது. அரளி கிலோ ரூ.200-க்கும், லில்லி பூ ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.240-க்கும் விற்கப்பட்டது.
செவ்வந்தி பூ நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாகக் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் 15-பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன.