விசாரணையில், சாலையை கடக்கும்போது நாய் மீது வாகனம் மோதியதில் நாய் இறந்தது தெரியவந்தது.
திருப்பூர்: திருப்பூரில் நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா, இவர் தனது வீட்டில் நாட்டின நாயை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே, காலை நாயானது சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நாயின் உரிமையாளர் பிரியா சம்பவம் குறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, நாயை சோதனை செய்து பார்த்தபோது, துப்பாக்கியால் சுட்டுதற்கு உண்டான அடையாளம் ஏதும் இல்லை.
மேலும், சாலையை கடக்கும்போது நாயை வாகனம் ஏதோ இடித்துச் சென்றதால் நாய் இறந்தது தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா, இவர் தனது வீட்டில் நாட்டின நாயை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே, காலை நாயானது சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நாயின் உரிமையாளர் பிரியா சம்பவம் குறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, நாயை சோதனை செய்து பார்த்தபோது, துப்பாக்கியால் சுட்டுதற்கு உண்டான அடையாளம் ஏதும் இல்லை.
மேலும், சாலையை கடக்கும்போது நாயை வாகனம் ஏதோ இடித்துச் சென்றதால் நாய் இறந்தது தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாயை சுட்டுக் கொன்றதாக வதந்தி பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.