கணவரை கைது செய்யாதது ஏன்? கோவையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு!

கணவர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யாதது ஏன்? அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: என் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யாதது ஏன் எனவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிசில் ஜேம்ஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மதுரை என்பவருடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2-பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரையின் தந்தை கோவை மாநகரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படியிருக்க இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட மன கசப்பால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று தர்மதுரையின் மனைவி ஹிசில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:- நான் என் கணவர் மற்றும் கணவர் வீட்டார் இழைக்கும் கொடுமைகளைத் தாங்காமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறேன்.



நான் 2019-ஆம் ஆண்டு என் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டும், விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தினமும் போன் செய்து ஜீவனாம்சம் தர மாட்டேன் என மிரட்டி வருகிறார்.

அதேபோல தந்தையின் போலீஸ் பதவியைப் பயன்படுத்தி கஞ்சா வழக்கு போடுவேன் எனவும் மிரட்டினார். அதேபோல என்னைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். பணிபுரியும் இடத்திற்கு வந்தும் தகாத வார்த்தைகள் பேசுகிறார்.

இப்படி இருக்க என் கணவர் அன்று நான் வேலைக்குச் சென்ற தினம் அவரது நண்பர்களுடன் வந்து எனது தந்தை ஜேம்ஸ், அண்ணன், அண்ணி மற்றும் ஆறுமாத கைக்குழந்தை என்று கூட பாராமல் அனைவர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இதைத் தொடர்ந்து எனது அண்ணன் குழந்தையைக் காப்பாற்றும் நோக்கில் என் கணவர் தர்மராஜை ஒரு அறையில் தள்ளிப் பூட்டினார்கள். தொடர்ந்து எனது தந்தை காவல் கட்டுப்பாட்டுத் துறை புகார் எண்ணுக்குத் தகவல் அளித்தார்.

இந்த நிலையில் எனது கணவர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எனது கணவர் தர்மராஜின் தந்தை காவல் துறையில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

அதேபோல அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர். ஆகவே மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணியை துஸ்பிரயோகம் செய்த கணவரின் தந்தை மீதும், கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகாரைப் பெறுவதில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட காவலர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...