கணவரை கைது செய்யாதது ஏன்? கோவையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு!

கணவர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யாதது ஏன்? அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: என் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யாதது ஏன் எனவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிசில் ஜேம்ஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மதுரை என்பவருடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2-பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரையின் தந்தை கோவை மாநகரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படியிருக்க இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட மன கசப்பால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று தர்மதுரையின் மனைவி ஹிசில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:- நான் என் கணவர் மற்றும் கணவர் வீட்டார் இழைக்கும் கொடுமைகளைத் தாங்காமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறேன்.



நான் 2019-ஆம் ஆண்டு என் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டும், விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தினமும் போன் செய்து ஜீவனாம்சம் தர மாட்டேன் என மிரட்டி வருகிறார்.

அதேபோல தந்தையின் போலீஸ் பதவியைப் பயன்படுத்தி கஞ்சா வழக்கு போடுவேன் எனவும் மிரட்டினார். அதேபோல என்னைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். பணிபுரியும் இடத்திற்கு வந்தும் தகாத வார்த்தைகள் பேசுகிறார்.

இப்படி இருக்க என் கணவர் அன்று நான் வேலைக்குச் சென்ற தினம் அவரது நண்பர்களுடன் வந்து எனது தந்தை ஜேம்ஸ், அண்ணன், அண்ணி மற்றும் ஆறுமாத கைக்குழந்தை என்று கூட பாராமல் அனைவர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இதைத் தொடர்ந்து எனது அண்ணன் குழந்தையைக் காப்பாற்றும் நோக்கில் என் கணவர் தர்மராஜை ஒரு அறையில் தள்ளிப் பூட்டினார்கள். தொடர்ந்து எனது தந்தை காவல் கட்டுப்பாட்டுத் துறை புகார் எண்ணுக்குத் தகவல் அளித்தார்.

இந்த நிலையில் எனது கணவர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எனது கணவர் தர்மராஜின் தந்தை காவல் துறையில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

அதேபோல அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர். ஆகவே மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணியை துஸ்பிரயோகம் செய்த கணவரின் தந்தை மீதும், கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகாரைப் பெறுவதில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட காவலர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...