நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஊட்டி மலைரயில் சேவை 15-ம் தேதி வரை ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு..!

தொடர் மழையால் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. இதை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஊட்டி மலைரயில் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக 22-ம் தேதி கல்லாறு, ஆர்டர்லி, ரயில் நிலையங்கள் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. அந்தப் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

ஆனால், ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடந்துவருவதால் கடந்த 23-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்து, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. இதை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை வருகிற 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...